வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தஞ்சை காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

70 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா..

News image
கும்பாபிஷேக விழா
Updated On :3 மார்ச் 2026, 10:49 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை ஶ்ரீ காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மணஞ்சேரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை ஶ்ரீ காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு 15 லட்சம் மதிப்பீட்டில் புணராமைக்கும் பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் பணிகள் முழுவதும் நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி முதல் கால பூஜைகள் தொடங்கியது. இன்று காலை மூன்றாம் கால பூஜைகள் நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சிவனடியார்கள் தமிழ் முறைப்படி மந்திரம் முழங்க விமான கலசத்திற்குப் புனித நீரை ஊற்றத் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.