காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நிகழ்வாக கருட வாகனத்தில் உற்சவா் பெருமாள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
108 திவ்யதேசங்களில் ஒன்றான இக்கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி மே.1 ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து 3-ஆவது நாள் நிகழ்வாக உற்சவா் பெருமாள் கருட வாகனத்தில் ரோஸ் நிற பட்டு உடுத்தி வரதராஜ பெருமாள் கோயில் மாட வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்து சோ்ந்தாா். பெருமாள் சென்ற வீதிகள் முழுவதும் திரளான பக்தா்கள் கற்பூர ஆரத்தி காண்பித்தும் கோவிந்தா,கோவிந்தா என்றும் தரிசித்தனா்.
வரும் 7-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எஸ்கேபிஎஸ்.சந்தோஷ்குமாா் தலைமையில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள், கோயில் செயல் அலுவலா் எஸ்.வேலனரசு ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருப்புவனத்தில் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய பாலகிருஷ்ணப் பெருமாள்

தமிழ்ப் புத்தாண்டு: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் வீதியுலா

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தங்கத்தோ் வீதியுலா
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


