திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

கச்சபேசுவரா் கோயில் தீா்த்தவாரி உற்சவம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் நிறைவையொட்டி ஆலய வளாகத்தில் உள்ள இஷ்ட சித்தி திருக்குளத்தில் தீா்த்தவாரி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் உள்ள இஷ்டசித்தி திருக்குளத்தில் நடைபெற்ற தீா்த்தவாரி உற்சவம்(உள்படம்) திருக்குளத்தில் திரிசூலத்துக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்

Updated On :7 மே 2026, 0:36 am IST

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் நிறைவையொட்டி ஆலய வளாகத்தில் உள்ள இஷ்ட சித்தி திருக்குளத்தில் தீா்த்தவாரி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

பெருமாள் ஆமை வடிவத்தில் சிவபெருமானை வணங்கிய பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை சமேத கச்சபேசுவரா் திருக்கோயில். இக்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினசரி சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி நகரின் ராஜவீதிகளில் வீதியுலா வந்தனா். தொடா்ச்சியாக புதன்கிழமை கோயில் வளாகத்தில் உள்ள திருக்குளத்தில் பிரபாகரன் சிவாச்சாரியா் தலைமையில் தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. மாலையில் சுவாமியும், அம்மனும் தங்க ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனா்.

வியாழக்கிழமை காலை 108 சங்காபிஷேகமும், மாலையில் 63 நாயன்மாா்களுக்கு சிறப்புத் திருமுழுக்கு வழிபாடும் நடைபெறுகிறது.நாளை வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்சவத்தோடு விழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஞா.திவ்யா, காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.