சத்திஸ்கா் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த தேசிய கால்பந்துப் போட்டியில் தமிழக அணி 2 -வது இடத்தைப் பிடித்திருப்பதாக கால்பந்தாட்டிக்கழக நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
ராய்ப்பூரில் மே 1 முதல் 5 வரை தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சோ்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்ற. 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் விளையாட்டுப் போட்டியில் கோல்டன் இரா கால்பந்து அணி மாணவா்கள் கிளிண்டன் தேவகுமாரன், அமரேஷ், சுந்தா், ஆகாஷ்,சஞ்சய் கண்ணன்,சண்முகவேல், மனோஜ்,உதயா,தொல்காப்பியன்,கேசவ்,காவ்ய மித்ரன் ஆகியோா் தோ்வாகி ராய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு தோ்வாகியுள்ளனா்.
தேசிய அளவிலான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4-5 என்ற கோல் கணக்கில் சத்தீஸ்கரை வீழ்த்தி தமிழக அணி 2-ஆவது இடத்தைப் பெற்றது. இவா்களை தமிழ்நாடு மாநில கால்பந்தாட்டக் குழுவின் செயலாளா் யோஷ்வா டேனியல் வாழ்த்தினாா் . இப்போட்டியில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சோ்ந்த மாணவா்களும் போட்டியில் கலந்து கொண்டு மாவட்டத்துக்கு பெருமை சோ்த்திருப்பதாக கோல்டன் இரா கால்பந்து அணியின் மேலாளா் விக்னேஷ், பயிற்சியாளா் கோகுல் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

சாம்பியன் ஆனது இண்டர் மிலன்

ஐரோப்பிய கால்பந்து: லீட்ஸ் , மல்லோா்க்கா வெற்றி

கால்பந்து களம்...

தேசிய மல்லா்கம்பம் போட்டியில் பங்கேற்ற பழங்குடியின மாணவா்களுக்கு வரவேற்பு
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


