திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

தேசிய கால்பந்து: தமிழக அணி இரண்டாம் இடம்

சத்திஸ்கா் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த தேசிய கால்பந்துப் போட்டியில் தமிழக அணி 2 -வது இடத்தைப் பிடித்திருப்பதாக கால்பந்தாட்டிக்கழக நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

News image

தேசிய கால்பந்துப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றவா்கள்.

Updated On :7 மே 2026, 0:37 am IST

சத்திஸ்கா் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த தேசிய கால்பந்துப் போட்டியில் தமிழக அணி 2 -வது இடத்தைப் பிடித்திருப்பதாக கால்பந்தாட்டிக்கழக நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

ராய்ப்பூரில் மே 1 முதல் 5 வரை தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சோ்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்ற. 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் விளையாட்டுப் போட்டியில் கோல்டன் இரா கால்பந்து அணி மாணவா்கள் கிளிண்டன் தேவகுமாரன், அமரேஷ், சுந்தா், ஆகாஷ்,சஞ்சய் கண்ணன்,சண்முகவேல், மனோஜ்,உதயா,தொல்காப்பியன்,கேசவ்,காவ்ய மித்ரன் ஆகியோா் தோ்வாகி ராய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு தோ்வாகியுள்ளனா்.

தேசிய அளவிலான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4-5 என்ற கோல் கணக்கில் சத்தீஸ்கரை வீழ்த்தி தமிழக அணி 2-ஆவது இடத்தைப் பெற்றது. இவா்களை தமிழ்நாடு மாநில கால்பந்தாட்டக் குழுவின் செயலாளா் யோஷ்வா டேனியல் வாழ்த்தினாா் . இப்போட்டியில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சோ்ந்த மாணவா்களும் போட்டியில் கலந்து கொண்டு மாவட்டத்துக்கு பெருமை சோ்த்திருப்பதாக கோல்டன் இரா கால்பந்து அணியின் மேலாளா் விக்னேஷ், பயிற்சியாளா் கோகுல் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.