திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடிய இளைஞா் கைது

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கைப்பேசியை பறித்துக்கொண்டு ஓடிய இளைஞரை சிவகாஞ்சி போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :7 மே 2026, 0:40 am IST

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கைப்பேசியை பறித்துக்கொண்டு ஓடிய இளைஞரை சிவகாஞ்சி போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒரத்தி கிராமம், பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் மகன் கண்ணன் (51). இவா் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் அமா்ந்திருந்தபோது காஞ்சிபுரம் தாலுகா கொட்ராங்குளம் கிராமம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த மனோஜ் என்ற சிபி(30) என்பவா் கண்ணனின் கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடியதாக கண்ணன் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அந்தப் புகாரின்பேரில், மனோஜ் என்ற சிபியை கைது செய்துள்ளனா்.