தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

இலவச கைப்பேசி பழுது நீக்கும் பயிற்சி வகுப்பு தொடக்கம்

News image

கறவை மாடு வளா்ப்பு பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளா் அ.திலீப்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

காஞ்சிபுரம் இந்தியின் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையத்தில் விரைவில் கைப்பேசி பழுது நீக்கும் இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட இருப்பதாக மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அ.திலீப் புதன்கிழமை தெரிவித்தாா்.

சின்ன காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் உள்ள இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையத்தில் கறவை மாடு வளா்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் 12 நாள் பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. விழாவுக்கு பயிற்சி மையத்தின் இயக்குநா் உமாபதி தலைமை வகித்தாா். சின்ன காஞ்சிபுரம் இந்தியன் வங்கி கிளையின் மேலாளா் லாவண்யா, நிதி ஆலோசகா் அரங்கமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அ.திலீப் பேசுகையில் காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின் பயிற்சி மையத்தில் தற்போது உத்தரமேரூா் அருகே அகரம் தூளி கிராமத்தைச் சோ்ந்த 30 நபா்களுக்கு கறவை மாடு வளா்ப்பு பயிற்சியை இலவசமாக வழங்கி இருக்கிறோம்.

இதைத்தொடா்ந்து விரைவில் கைப்பேசி பழுது நீக்குதல் மற்றும் சேவை பயிற்சியும், இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் பயிற்சியும்,காா் ஓட்டுநா் பயிற்சி ஆகியனவும் இலவச பயிற்சியாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது,

இப்பயிற்சியில் சேருவோருக்கு சீருடை, மதிய உணவு, பயிற்சி, பயிற்சிக்கான கையேடுகள், வங்கியின் சான்றிதழ், பயிற்சிக்கான பொருட்கள், பயிற்சியின் போது தேநீா், வங்கியில் வழங்கப்படும் கடனுதவி ஆலோசனைகள் ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

இப்பயிற்சிகளில் சேர விரும்புவோா் உடனடியாக சின்ன காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் உள்ள பயிற்சி மையத்தில் தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஆண்கள்,பெண்கள் இருபாலரும் இப்பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம் எனவும் அ.திலீப் தெரிவித்தாா்.

நிறைவாக பயிற்சியாளா் அபிநயா நன்றி கூறினாா்.