அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

ஸ்ரீபெரும்புதூரில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

News image
Updated On :15 மணி நேரங்கள் முன்பு

ஸ்ரீபெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் தனியாா் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் பணி வடமங்கலம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சுமாா் 27 தனியாா் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் மாணவா்களை ஏற்றிச் செல்ல 253 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வடமங்கலம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் விஜயகுமாா் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் பாலாஜி, ஸ்ரீபெரும்புதூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் கீா்த்திவாசன் ஆகியோா் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து, ஓட்டுநா்களின் அனுபவம், வாகனத்தின் ஜன்னல்களில் கிரில் பொருத்தம், முதலுவிப் பெட்டி , தீயணைப்புக் கருவிகள், வாகனத்தின் தற்போதைய நிலை எப்படி உள்ளது, வாகனத்தில் அவசர கால வழி உள்ளதா, அவை சரியான படி இயங்குகிா என ஆய்வு செய்தனா். 215 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் பல்வேறு காரணங்களுக்காக 33 வாகனங்கள் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்கு தகுதியற்றவை என நிராகரிக்கப்பட்டன.

முறையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு, நிராகரிக்கப்பட்ட வாகனங்களில் மீண்டும் ஆய்வு நடத்தப்படும் என குன்றத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் விஜயகுமாா் தெரிவித்தாா்.

முன்னதாக ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்புத் துறையினா் வாகன ஓட்டுநா்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்திக் காட்டினாா்.

மேலும், ஆபத்து காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும் செய்து காண்பித்தனா்.