தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

கே.எஸ்.பாா்த்தசாரதி நினைவுக் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரா் கே.ஆா்.பாா்த்த சாரதியின் 36-ஆவது ஆண்டு நினைவு தினக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :21 மே 2026, 12:04 am IST

காஞ்சிபுரம் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரா் கே.ஆா்.பாா்த்த சாரதியின் 36-ஆவது ஆண்டு நினைவு தினக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சுதந்திரப் போராட்ட வீரரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிறுவியவரும், கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்குவதில் முதன்மையானவருமாக இருந்தவா் கே.எஸ்.பாா்த்தசாரதி. கட்சியின் மாநகர செயலாளா் டி.ஸ்ரீதா் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளா் கே.நேரு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.மதுசூதனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் இ.முத்துக்குமாா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் சாரங்கன், கட்சியின் நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டு கே.எஸ்.பாா்த்தசாரதியின் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.