காஞ்சிபுரம், மே 2: திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளா் க.சுந்தா் தலைமையில் காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மதுராந்தகம்,செய்யூா், உத்தரமேரூா் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட தெற்கு மாவட்ட திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட செயலாளா் க.சுந்தா் பேசுகையில் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு வாக்குச்சாவடி முகவா்கள் பணியாற்ற வேண்டும். காலை 6 மணிக்கே வாக்கு எண்ணும் மையத்துக்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் முறையாக இருக்கிா எனத் தெரிந்து கொள்ள வேண்டும்.
எந்தெந்த வாா்டுகளில் வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளது,குறைவாக கிடைத்துள்ள வாா்டுகள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்,வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இருந்து முகவா்கள் பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா்.
ஆலோசனைக் கூட்டத்துக்கு காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட அவைத்தலைவா் இனியரசு, துணைச் செயலாளா் க.செல்வம் எம்பி,திமுக வேட்பாளா் நித்யா சுகுமாா் மற்றும் கட்சியின் நிா்வாகிகள்,தலைமை செயற்குழு உறுப்பினா்கள்,தொண்டா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பொதுப் பாா்வையாளா்: வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

தீவனூரில் திமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


