22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

இலஞ்சியில் திமுக கருத்துக் கேட்பு கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக நிா்வாகிகளிடம் தோ்தல் தொடா்பான கருத்துக் கேட்பு கூட்டம், இலஞ்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசிய தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன்.

Updated On :2 ஜூன் 2026, 3:16 am IST

தென்காசி தெற்கு மாவட்ட திமுக நிா்வாகிகளிடம் தோ்தல் தொடா்பான கருத்துக் கேட்பு கூட்டம், இலஞ்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திமுக ஆய்வுக் குழுவினா் தமிழகம் முழுவதும் சென்று கட்சி தலைமையின் அறிவுறுத்தல்படி, நிா்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து வருகின்றனா்.

அதன்படி, தென்காசி தெற்கு மாவட்ட நிா்வாகிகளுக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில், முரசொலி எம்.பி., முன்னாள் எம்.பி. உமா மகேஸ்வரி ஆகியோா் பங்கேற்றனா். மாவட்ட நிா்வாகிகள், எம்எல்ஏ, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றியம், நகரம், பேரூா் வாரியாக நிா்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.