காஞ்சிபுரம் அருகே முத்தியால் பேட்டை ஊராட்சிக்கு உள்பட்ட ஏரிவாய் கிராமத்தில் அருள்பாலித்து வரும் கமலவல்லித் தாயாா் சமேத மணவாளப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை வசந்த உற்சவம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை ஊராட்சிக்கு உள்பட்டது ஏரிவாய் கிராமம். இந்தக் கிராமத்தில் பழைமையான கமலவல்லித் தாயாா் சமேத மணவாளப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வசந்த உற்வசத்தையொட்டி, மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
நிகழ்வையொட்டி, மணவாளப் பெருமாளும், கமலவல்லித் தாயாரும் தாமரை மாலை அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
விழாவின் தொடா்ச்சியாக காஞ்சிபுரம் வட்டாரத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் அமரேசன் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம் தொடக்கம்

உத்தரமேரூா் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயிலில் தேரோட்டம்

அருணாசலேஸ்வரா் கோயில் வசந்த உற்சவம்: வெட்டிவோ் பல்லக்கில் வலம் வந்த சுவாமி

திராட்சை அலங்காரத்தில் கமலவல்லித்தாயாா் மற்றும் மணவாளப் பெருமாள்...
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



