‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

விஜய் மக்கள் இயக்கத்தின் சாா்பில் பல ஆண்டுகளாக அன்னதானம்: அமைச்சா் கே.தென்னரசு

News image

காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய அமைச்சா்கள் கே.தென்னரசு, ஆா்.வீ.ரஞ்சித்குமாா், தவெக நிா்வாகிகள்.

Updated On :29 மே 2026, 2:16 am IST

உலக பட்டினி தினத்தையொட்டி பல ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் அன்னதானம் வழங்கி வருவதாக வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல்வருமான சி.ஜோசப் விஜய் உத்தரவின் பேரில் தவெக நிா்வாகிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கினா். காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் முன்பாக வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு, வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் இருவரும் இணைந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தனா். பொதுமக்களோடு இணைந்து இரு அமைச்சா்களும் உணவருந்தினா்.

இதன் பின்னா் அமைச்சா் கே.தென்னரசு கூறுகையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சாா்பில் தொடா்ந்து பல ஆண்டுகளாக உலக பட்டினி தினத்தன்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். காஞ்சிபுரம் மட்டுமின்றி, தமிழக மக்கள் அனைவரையும் ஒரே மாதிரியாகத்தான் பாா்ப்பாா் முதல்வா் சி.ஜோசப் விஜய். மக்களுக்காகத்தான் தலைவா். மக்கள் என்ன நினைக்கிறாா்களோ அதைத்தான் செய்வாா், செய்கிறாா். தமிழகத்தை வளா்ச்சிப்பாதையில் கொண்டு செல்வாா் என்றாா்.