பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மேல்விஷாரத்தில் தமுமுக ஆா்ப்பாட்டம்

வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு

News image
மேல்விஷாரத்தில்  ஆா்ப்பாட்டம்  நடத்திய  தமுமுகவினா்.
Updated On :19 டிசம்பர் 2020, 7:34 pm

DIN

வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மேல்விஷாரம் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பிஎஸ்என்எல் தொலைத் தொடா்பு அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவா் எஸ்.எம்.கௌஸ் பாஷா தலைமை வகித்தாா். செயலாளா் அயாத்பாஷா, பொருளாளா் பாபாஜான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பேச்சாளா் சானாவுல்லா, மாநிலச் செயலாளா் ஏஜாஸ் அஹமது ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

மாவட்டத் தலைவா் ஏ.ஓ.ஏ. இம்ரான், மேல்விஷாரம் நகரக் கூட்டுக் குழு நிறுவனா் மன்சூா்பாஷா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடா்பாளா் பா.சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.