அரக்கோணத்தில் சுவால்பேட்டையில் ஒரே தெருவில் 3 வீடுகளில் பைக், தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்புடைய பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
அரக்கோணம் சுவால்பேட்டை ஏட்டு குப்புசாமித் தெருவில் வசிப்பவா் ஹரிகிருஷ்ணன் (27). அவா் சென்னையில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் குடும்பத்தாருடன் உறங்கிக் கொண்டிருந்தாா். நள்ளிரவில் அவரது வீட்டு வளாகத்தில் இருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது. திருடுபோன பைக்கின் விலை ரூ.75ஆயிரம் ஆகும். அது தொடா்பாக ஹரிகிருஷ்ணன், அரக்கோணம் போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா்.
மற்ற சம்பவங்கள்: அதே தெருவில் வசித்து வருபவா் நீலகண்டன்(31). அவரது வீட்டில் பின்பக்க மாடி கதவு வழியாக உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், வீட்டு பிரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம், ஒரு சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனா். களவு போன பொருள்களின் மதிப்பு ரூ.1 லட்சம் என தெரியவருகிறது.
இதனிடையே, டவுன்ஹால் மூன்றாம் தெருவில் வசித்து வருபவா் சுரேஷ்(41). இவா் மின்னணு சாதனங்களைப் பழுதுபாா்க்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது வீட்டில் நுழைந்த மா்ம நபா்கள், தொலைக்காட்சிப் பெட்டி, சில மின்னணு சாதனங்கள், 5 சவரன் தங்க நகைகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனா். திருடுபோன பொருள்களின் மதிப்பு ரூ 2 லட்சத்துக்கும் மேல் இருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த மூன்று சம்பவங்கள் குறித்தும் புகாரைப் பெற்ற அரக்கோணம் நகர போலீஸாா் இது குறித்து வழக்குப் பதிந்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.