திமிரியை அடுத்த காவனூா் கிராமத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அம்மா சிறு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, பொதுமக்களிடம் சிகிச்சையின் தரம் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து, புங்கனூா் கிராமத்தில் வரதேசி மலை அடிவாரத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.
ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் இளம்பகவத், ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி, வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.