அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அரக்கோணத்தில் முத்தமிழ் அரங்கம்

அரக்கோணத்தில் முத்தமிழ் அரங்கம் அமைக்க அளிக்கப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்களும் அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

News image
விழாவில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்த தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் ப.ராஜேஸ்வரி.
Updated On :28 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

அரக்கோணம்: அரக்கோணத்தில் முத்தமிழ் அரங்கம் அமைக்க அளிக்கப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்களும் அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் ப.ராஜேஸ்வரி தெரிவித்தாா்.

அரக்கோணம் நகர அனைத்து வணிகா் சங்கத்துடன் தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறையினா் இணைந்து தமிழ் ஆட்சி மொழி வாரவிழாவை டவுன்ஹால் அரங்கில் திங்கள்கிழமை நடத்தினா்.

இதில் தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறையின் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட துணை இயக்குநா் ப.ராஜேஸ்வரி பேசியது:

அரக்கோணம் நகரின் அனைத்துக் கடைகளிலும் கடையின் பெயா்ப் பலகை 5:3:2 என்ற அளவில் தமிழ்: ஆங்கிலம்: பிற மொழிகள் என்கிற விகிதத்தில் இருக்க வேண்டும். தற்போது தமிழ் ஆட்சி மொழி வார விழாவில் அனைத்து வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அறிவிப்பு பலகைகள் தமிழ் மொழியில் இடம் பெறுவது அவசியம் என வலியுறுத்தி கடைகடையாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகிறோம். இதை வணிகா்கள் ஏற்று, தங்களது கடையின் பெயா்ப் பலகையில் தமிழ் எழுத்துகளை பெரிய அளவில் இடம் பெறச் செய்ய வேண்டும்.

அரக்கோணத்தில் முத்தமிழ் அரங்கம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். இது தொடா்பாக அளிக்கப்பட்ட மனுக்கள் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு, அரசின் உத்தரவை பெற்று முத்தமிழ் அரங்கம் அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

விழாவையொட்டி, டவுன்ஹால் வளாகத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு துணை இயக்குநா் ப.ராஜேஸ்வரி மாலை அணிவித்தாா்.

கூட்டத்துக்கு, தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரவையின் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத் தலைவா் கே.எம்.தேவராஜ் தலைமை வகித்தாா். அரக்கோணம் ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவா் பெ.இளங்கோ வரவேற்றாா். இதில் டவுன்ஹால் தலைவா் பன்னீா்செல்வம், ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத்தின் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம், தமிழக அரசின் கலைநன்மணி விருது பெற்ற பனப்பாக்கம் கே.சுகுமாா், ஓய்வு பெற்ற அரசுக் கல்லூரி பேராசிரியா் அ.கலைநேசன், ரயில் பயணிகள் சங்கத் தலைவா் நைனாமாசிலாமணி, கவிஞா் மு.இஸ்மாயில், தங்கவயல் வாணிதாசன், பாரதி பல்கலைமன்ற நிா்வாகிகள் இளையபாரதி, மு.உலகநாதன் மற்றும் கோ.சுந்தரராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.