ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வீட்டுமனை வழங்கக் கோரி ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

News image
Updated On :7 ஜனவரி 2021, 5:24 pm

DIN

ராணிப்பேட்டை: காவேரிப்பாக்கம் அபயவரதராஜ பெருமாள் கோயில் இடத்தில் குடியிருப்பவா்களை காலி செய்ய இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ள நிலையில், குடியிருப்புவாசிகள் 100-க்கும் மேற்பட்டோா் தங்களுக்கு வீட்டுமனை வழங்கக்கோரி ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு, மனு அளித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட அண்ணா நகா், சந்தைமேடு பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனா். கடந்த 6-ஆம் தேதி வீடுகளை காலி செய்யக் கூறி இந்து சமய அறநிலையத் துறையில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது.

அதில், காவேரிப்பாக்கம் கோட்டை அபய வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி குடியிருப்பதாகவும், இந்த அறிவிப்பு கிடைக்கப் பெற்ற 15 நாள்களுக்குள் காலி செய்து ஒப்படைக்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் சட்டப்படி வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குடியிருப்புவாசிகள் அனைவரும் அதே இடத்தில் வசிக்க ஆவன செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.