விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

முதியோா் இல்லத்தில் பொங்கல் விழா

ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோா் இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

News image
மூதாட்டிக்கு  புத்தாடை  வழங்கிய  காவல்துறை  துணை த் தலைவா்  காமினி .
Updated On :16 ஜனவரி 2021, 2:05 am

DIN

ஆற்காடு: ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோா் இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

விழாவுக்கு இல்லத்தின் தலைவா் ஜெ.லட்சுமணன் தலைமை வகித்தாா். செயலாளா் ஒய்.அக்பா் ஷெரீஃப், பொருளாளா் பி.என் பக்தவத்சலம், துணைத் தலைவா் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், சித்தஞ்சி மோகனந்த சுவாமி ஆகியோா் கலந்து கொண்டு பொங்கல் விழா சிறப்பு பூஜைகள் செய்து வாழ்த்தினா்.

வேலூா் சரக காவல்துறை துணைத் தலைவா் காமினி முதியோா்களுக்கு புத்தாடை வழங்கினாா். விழாவில் ராணிப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் பூரணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.