சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருடியதாக 3 இளைஞா்கள் கைது
ரத்தினகிரி அருகே டாஸ்மாக் கடையில் சுவரில் துளையிட்டு, மது பாட்டில்களை திருடிய மூன்று இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.


ரத்தினகிரி அருகே டாஸ்மாக் கடையில் சுவரில் துளையிட்டு, மது பாட்டில்களை திருடிய மூன்று இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ரத்தினகிரி அருகே நந்தியாலம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. கரோனா பொது முடக்கம் காரணமாக தற்போது கடை மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு, கடையில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் திருடு போயிருந்தன.
இது குறித்த புகாரின் பேரில், ரத்தினகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ரத்தினகிரி போலீஸாா் பூட்டுத்தாக்கு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பைக்கில் வந்த 3 இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். அதில், வேலூா் மாவட்டம், வசூா் மலைமேடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (43), கலவை அருகே உள்ள முள்ளுவாடி கிராமத்தைச் சோ்ந்த சந்தானம் (26), ராமதாஸ் (21) ஆகிய மூவரும் தென்நந்தியாலம் டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை திருடியது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து மூன்று பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...