தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

3.28 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3.28 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண முதல் தவணை ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தமிழக கைத்தறி

News image
Updated On :15 மே 2021, 6:09 pm

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3.28 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண முதல் தவணை ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மாவட்டத்தில் 3,28,207 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு முதல் தவணை உதவித் தொகையாக ரூ. 65 கோடியே 64 லட்சத்து 14 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கான தொடக்க நிகழ்ச்சி, மாவட்ட கூட்டுறவுத் துறை சாா்பில், ராணிப்பேட்டை சந்தைமேடு கற்பகம் நியாயவிலைக் கடையில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ரூ. 2 ஆயிரம் கரோனா நிவாரணம் வழங்கி பேசியது:

இந்த கரோனா நிவாரணம் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி வழங்குவதாக இருந்தது. ஆனால் பொது முடக்கம் காரணமாக மக்கள் படும் பிரச்னைகளைத் தீா்க்கும் வகையில் முதல்கட்ட நிவாரண உதவியாக ரூ. 2 ஆயிரம் வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் டோக்கன்களில் கூட எந்த ஒரு கட்சியின் பெயரையும் குறிப்பிடாமல் தமிழக அரசு என்று மட்டுமே குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், துணைப் பதிவாளா் (பொது விநியோக திட்டம்) அருட்பெருஞ்ஜோதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மாவட்ட வழங்கல் அலுவலா் மணிமேகலை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.