தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆற்காட்டில் கரோனா தடுப்புப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

ஆற்காடு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தொற்றுத் தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று பேசினாா்.

News image
Updated On :22 மே 2021, 6:08 pm

DIN

ஆற்காடு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தொற்றுத் தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று பேசினாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்றுத் தடுப்பு பணிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு துரிதப்படுத்தி வருகிறாா்.

அதன்படி ஆற்காடு ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று கரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள், துப்புரவுப் பணியாளா்களின் செயல்பாடுகள், தேவைகள் மற்றும் கிருமி நாசினி தெளித்தல் கரோனா தடுப்பூசி போடுதல் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கி நோய்த் தொற்றுத் தடுப்பு பணிகளை துரிதமாக செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், திட்ட துணை இயக்குனா் (பொ) எம்.ஜெயராமன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேதமுத்து, செந்தாமரை, திமுக மாவட்டதுணைச் செயலாளா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, ஒன்றியச் செயலாளா் எம்.வி. பாண்டுரங்கன், நகரச் செயலாளா் ஏ.வி.சரவணன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத், மாவட்ட வா்த்தகா் அணி துணை அமைப்பாளா் கே.ஜி. முரளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.