ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ஓச்சேரி அருகே பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய 7 இளைஞர்கள் மீட்பு

ஓச்சேரி அருகே பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய 7 இளைஞர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

News image

வெள்ளத்தில் சிக்கிய 7 இளைஞர்கள் மீட்பு.

Updated On :14 நவம்பர் 2021, 1:08 pm

DIN

ஓச்சேரி அருகே பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய 7 இளைஞர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 
ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி அடுத்து மாமண்டூர் கிராமம் அருகே பாலாற்றில் பாலாற்றில் விளையாட்டாக குளிக்கச் சென்ற மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த அமுதன்(18 ), நந்தகுமார் (18), சின்னராசு (18 ), சுபாஷ் (20), ரமேஷ் (20), கோகுல் (20), நாதன் 20 ஏழு இளைஞர்கள் பாலற்றில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு கரையில் ஒதுங்கி உள்ளனர். 

Story image


அவர்கள் தங்களை காப்பாற்ற கோரி உதவி கோரியுள்ளனர். உடனடியாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 
பின்னர் கடும் போராட்டத்துக்கு பிறகு வெள்ளத்தில் சிக்கிய 7 இளைஞர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.