ஓச்சேரி அருகே பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய 7 இளைஞர்கள் மீட்பு

ஓச்சேரி அருகே பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய 7 இளைஞர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 
வெள்ளத்தில் சிக்கிய 7 இளைஞர்கள் மீட்பு.
வெள்ளத்தில் சிக்கிய 7 இளைஞர்கள் மீட்பு.

ஓச்சேரி அருகே பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய 7 இளைஞர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 
ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி அடுத்து மாமண்டூர் கிராமம் அருகே பாலாற்றில் பாலாற்றில் விளையாட்டாக குளிக்கச் சென்ற மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த அமுதன்(18 ), நந்தகுமார் (18), சின்னராசு (18 ), சுபாஷ் (20), ரமேஷ் (20), கோகுல் (20), நாதன் 20 ஏழு இளைஞர்கள் பாலற்றில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு கரையில் ஒதுங்கி உள்ளனர். 


அவர்கள் தங்களை காப்பாற்ற கோரி உதவி கோரியுள்ளனர். உடனடியாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 
பின்னர் கடும் போராட்டத்துக்கு பிறகு வெள்ளத்தில் சிக்கிய 7 இளைஞர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com