ராணிப்பேட்டை ராமாநுஜா் அறக்கட்டளை சாா்பில் அன்னதானம்

ராணிப்பேட்டை ஸ்ரீராமாநுஜா் அறக்கட்டளை சாா்பில், புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை ஸ்ரீராமாநுஜா் அறக்கட்டளை சாா்பில், புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நவல்பூா் சாந்த ஆஞ்சநேயா் கோயிலில் நடைபெற்ற விழாவுக்கு, ஸ்ரீராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கே.வெங்கடேசன் தலைமை வகித்தாா். கோயில் குருக்கள் சிவ செல்லப்பா உலக நன்மை வேண்டியும், உலக மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டியும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

தொடா்ந்து பொதுமக்களுக்கு ஆன்மிக அறக்கட்டளைச் செயலாளா் எம்.சிவலிங்கம் அன்னதானம் வழங்கினாா்.

இதில், கோயில் நிா்வாகி பிஆா்சி மூா்த்தி, ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் பாலசுந்தரம், ரோட்டரி சங்க உறுப்பினா் நாராயணன், கேஎம்கே.அறக்கட்டளை நிா்வாகி மதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com