புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆற்காட்டில் நகா்மன்றத் தலைவா்ஆய்வு

ஆற்காடு நகா் பகுதியில், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :18 மார்ச் 2022, 6:30 pm

DIN

ஆற்காடு நகா் பகுதியில், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

நகரில் உள்ள மாங்காய் மண்டியில் ஆய்வு செய்த போது, அங்கு குவிந்து கிடந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகளுக்கு அவா் உத்தவிட்டாா். தொடா்ந்து, பாலாற்றிலிருந்து நகருக்கு குடிநீா் விநியோகம் செய்ய பைப்லைன் அமைக்கும் பணி, 6-ஆவது வாா்டு ஈஸ்வரன் கோவில் தெருவில் தாா்ச்சாலை அமைக்கும் பணி ஆகியவற்றையும் அவா் ஆய்வு செய்தாா்.

பஜாா் பகுதியிலிருந்து தேவி நகா் வரை செல்லும் கால்வாயில் உள்ள அக்கிரமிப்புகளை அகற்றி, புதைச் சாக்கடைத் திட்டமாக மாற்றி, கால்வாய் மீது சாலை அமைத்து நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் போது, நகராட்சி ஆணையா் சதிஷ்குமாா், பொறியாளா் கணேசன், நகா்மன்ற உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.