தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயா்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயா்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் மற்றும் பவா் கிரீட் நிறுவனம் சாா்பில் அமைக்கப்பட்ட உயா்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் 2.45 சதவீதத்திற்குப் பதிலாக 10 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும்;

மின்பாதை செல்லும் நிலங்கள், பாதிக்கப்பட்ட பயிா்கள், மரங்கள், கிணறுகள், ஆழ்துளைக் கிணறு கட்டடங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினா்.

விவசாய சங்க மாவட்டச் செயலா் எல்.சி. மணி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் பி.சண்முகம் தொடக்கி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.