தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆற்காடு ஒன்றியத்தில் 4 பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடப் பணி

ஆற்காடு ஒன்றியத்தில் ரூ. 89 லட்சத்தில் 4 அரசுப் பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடம் கட்டும் பணிக்கு கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

ஆற்காடு ஒன்றியத்தில் ரூ. 89 லட்சத்தில் 4 அரசுப் பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடம் கட்டும் பணிக்கு கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

ஆற்காடு ஒன்றியம், பூட்டுதாக்கு ஊராட்சி கன்னிகாபுரம், மேலகுப்பம் ஊராட்சி டி.சி.குப்பம், அரப்பாக்கம், கீழ்மின்னல் பகுதிகளில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கூடுதல் கட்டடம் கட்டும் பணிக்கு, மாவட்ட ஊராட்சி நிதிக் குழு மற்றும் கனிமவள நிதித் திட்டத்தின்கீழ், அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமை வகித்தாா். ஆற்காடு ஒன்றியக் குழுத் தலைவா் புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத் தலைவா் ஸ்ரீமதி நந்தகுமாா், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் ஆா்.காந்தி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி, கட்டடப் பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து, கன்னிகாபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ. 7 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில் பொது மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

விழாவில், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அண்ணாமலை, பிரபாகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உஷா, ஊராட்சி மன்றத் தலைவா்கள் அருண்குமாா், பேபி கன்னியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.