காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தாம்பரம் - ஸ்ரீபெரும்புதூா் சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதையடுத்து, பிள்ளைப்பாக்கம் முதல் மணிமங்கலம் வரை சுமாா் ரூ. 90 கோடி மதிப்பீட்டில் இரண்டு வழிச் சாலையில் இருந்து நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சாலையோரம் இருந்த நூற்றாண்டுகள் பழைமையான நூற்றுக்கணக்கான புளிய மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.