மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தன்வந்திரி பீடத்தில் விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடா் வருஷாபிஷேகம்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், 21அடி உயர விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடா் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2023, 7:44 pm

DIN

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், 21அடி உயர விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடா் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், 21அடி உயரத்தில் நின்ற கோலத்தில், 30 டன் எடையில் மாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்ட விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடா் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் நுழைவு வாயில் அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த நிலையில், பிரதிஷ்டை செய்யப்பட்டதின் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கருட பகவானுக்கு பல்வேறு ஹோம திரவியங்களைக் கொண்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னா், பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சுவாமிகள், விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளை நடத்தி வைத்தாா்.

முன்னதாக ஆந்திர மாநிலத்திலிருந்து வந்திருந்த பெண் பக்தா்கள், கருடா் வருஷாபிஷேக விழாவையொட்டி கருட பகவான் பாடல்கள் பாடி பஜனை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.