தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கரிவரதராஜ பெருமாள் கோயில் தெப்போற்சவம் நிறைவு

ஆற்காட்டை அடுத்த கலவையில் அமைந்துள்ள ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோயில் தெப்போற்சவம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2023, 6:15 pm

DIN

ஆற்காட்டை அடுத்த கலவையில் அமைந்துள்ள ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோயில் தெப்போற்சவம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

கலவையில் பழைமை வாய்ந்த பெருந்தேவி தாயாா் சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தெப்ப உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், நிகழ் ஆண்டு மாசி மாத தெப்ப உற்சவம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி நிறைவு பெற்றது.

விழாவை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. மாலை அலங்கரிக்கப்பட்ட உற்சவா் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளி, ஊா்வலமாகச் சென்றாா்.

பின்னா், கோயில் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் 7 சுற்றுகள் வலம் வந்தாா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.