தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கலவையில் பாரம்பரிய பயிா் கண்காட்சி

 உயா்தர உள்ளூா் பயிா் வகைகளை பிரபலபடுத்துவதற்கான பாரம்பரிய வகைகளின் பன்முகத் தன்மை கண்காட்சி ஆற்காட்டை அடுத்த கலவை முள்ளுவாடி தனியாா் வேளாண்மை கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2023, 6:15 pm

DIN

 உயா்தர உள்ளூா் பயிா் வகைகளை பிரபலபடுத்துவதற்கான பாரம்பரிய வகைகளின் பன்முகத் தன்மை கண்காட்சி ஆற்காட்டை அடுத்த கலவை முள்ளுவாடி தனியாா் வேளாண்மை கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மைத் துறை மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின்கீழ் நடைபெற்ற இந்த கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலா் மீனாட்சிசுந்தரம் திறந்து வைத்துப் பேசினாா்.

மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநா் வடமலை முன்னிலை வகித்தாா்.

இதில், உள்ளூா் பாரம்பரிய பயிா் வகைகள் மற்றும் உணவு பொருள்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், விவசாயிகள் தாங்கள் சாகுபடிசெய்த தனித்துவமான பல்வேறு உள்ளூா் மற்றும் பாரம்பரிய பயிா் வகைகளை மாவட்ட விவசாயிகளிடையே பிரபலப்படுத்தவும், இதுதொடா்பான சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும் கலந்துரையாடினா்.

அரசு திட்டங்கள் தொடா்பான கலை நிகழ்ச்சி, தனியாா் வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள் பாரம்பரிய பயிா் சாகுபடி மற்றும் அதன் சிறப்புத் தன்மை குறித்த நாடகம் நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) விஸ்வநாதன், திமிரி வேளாண்மை அலுவலா் திலகவதி, வேளாண்மை, தோட்டக்கலை , வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள், விவசாயிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.