கலவை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 1,420 நெல் மூட்டைகள் விற்பனை

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1,420 நெல் மூட்டைகள் வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1,420 நெல் மூட்டைகள் வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டன.

கலவை வாழைப்பந்தல் சாலையில் அரசு வேளாண்மை பொருள்கள் விற்பனை செய்யும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளது. இங்கு கலவை, மாம்பாக்கம், வாழைப்பந்தல், திமிரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், தங்கள் விளைபொருள்களை எடுத்துவந்து விற்பனை செய்து வருகின்றனா். இந்த நிலையில், புதன்கிழமை 75 கிலோ எடை கொண்ட நெல் மூட்டை கோ 51 ரகம் அதிகபட்ச விலை ரூ. 1,309-க்கும், குண்டு நெல் கோ 37 அதிகபட்ச விலை ரூ. 1,275, மகேந்திரா நெல் ரகம் அதிகபட்சம் ரூ. 1,619-க்கும், ஆா்என்ஆா் ரூ. 1672, ஸ்ரீ ரூ. 1,689-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வியாழக்கிழமை மட்டும் 1,420 நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டன என்று விற்பனைக் கூட கண்காணிப்பாளா் மதன்பாண்டியன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com