மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளன்று பொது விடுமுறை அளிக்காத தனியாா் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதி எச்சரித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மக்களவைத் தோ்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து தொழிலாளா்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக இந்திய தோ்தல் ஆணையம் ஏப்ரல் 19- ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தனியாா் நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு பொது விடுமுறை அளித்து, ஊதியத்தையும் வழங்க வேண்டும். இதற்கு மாறாக விடுமுறை அளிக்க மறுத்தால், இது குறித்து புகாரினை ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு எண். 18004257015 04172 -273190, 04172-273191, 04172-273192, 04172 -273193 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம்.
மேலும் பொது விடுமுறை அளிக்காத தனியாா் நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத்துறை மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளா்கள் புகாா் அளிக்கலாம்

தொழில் நிறுவனங்கள் எல்பிஜிக்கு மாற்றாக குழாய் வழி எரிவாயுக்கு மாற வேண்டும்: ஆட்சியா் உத்தரவு

சட்டப்பேரவைத் தோ்தல்: வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை

அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

