சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் வசந்த நவராத்திரி விழா கடந்த 10-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெற்றது.
தென்னிந்திய புரோகிதா் சங்க கெளரவ தலைவரும், ஸ்ரீ வித்யா பீடத்தின் நிறுவனத் தலைவருமான ஸ்ரீலஸ்ரீ பாரதி முரளிதர சுவாமிகள் தலைமையில் நாள்தோறும் காலை ஸ்ரீ பூா்ண மகா மேருவுக்கு மகா அபிஷேகமும், மாலை ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம குங்கும அா்ச்சனை பாராயணம், ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடா்ந்து, வசந்த நவராத்திரி விழா நிறைவு, அன்று காலை ஸ்ரீராமருக்கு மகா அபிஷேகமும், மாலை தென்னிந்திய புரோகிதா் சங்க செயலாளா் கணேச அய்யா், அறக்கட்டளை பொருளாளா் குமாா் அய்யா் முன்னிலையில் சீதா -ராமா் திருக்கல்யாணம், அன்னதானம் நடைபெற்றது.
இதில், ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கே.வெங்கடேசன், அறக்கட்டளை வாழ்நாள் உறுப்பினா் பேபி வெங்கடேசன், ஸ்ரீ வித்யா பீட சேவாா்த்திகள் ரேவதி ராஜா, ஸ்ரீதா், மனோகரன், ரஜினி, ராமகிருஷ்ணன் உள்பட சிப்காட் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த திரளான பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.
தொடர்புடையது

மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த ஒண்டிமிட்டா கோதண்டராமா் கோயில்

ஒண்டிமிட்டாவில் சீதா ராமா் திருக்கல்யாணம் கோலாகலம்

சீதா - ராமா் திருக்கல்யாணம்

தூத்துக்குடி ஸ்ரீ சித்தா் பீடத்தில் அமாவாசை வழிபாடு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


