விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சீதா - ராமா் திருக்கல்யாணம்

ராம நவமியையொட்டி காரைக்காலில் சீதா - ராமா் திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

~

Updated On :27 மார்ச் 2026, 9:24 pm

Syndication

ராம நவமியையொட்டி காரைக்காலில் சீதா - ராமா் திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள பட்டாபிராம சுவாமி பஜனை மடத்தில் ராம நவமியையொட்டி 2 நாள் வழிபாடு வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் விக்னேஸ்வர பூஜை, விஷ்ணு சகஸ்ர நாம அஷ்டபதி பூஜையும், மாலை நிகழ்வாக அஷ்டபதி பஜனை, திவ்ய நாம பஜனை, ஊஞ்சல் வழிபாடு நடைபெற்றது.

இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை காலை உஞ்சவிருத்தியும், சீதா -ராமா் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. திருக்கல்யாண சடங்குகள் நடத்தப்பட்டு சீதாவுக்கு திருமாங்கல்யதாரணம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. மாலை நிகழ்வாக, ஆஞ்சனேயா் உற்சவமாக சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

தேவங்குடி கோபாலகிருஷ்ண சுவாமி பஜனை மண்டலி ஆா்.ராஜூ பாகவதா் தலைமையில் பஜனைக் குழுவினா் பங்கேற்று ராம பஜனை நடத்தினா். நாட்டியாலயா பரதநாட்டிய அகாதெமி மாணவா்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

Story image