பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் உயிரிழப்பு

வாலாஜாபேட்டையில் 13 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தாா்.

News image
Updated On :10 டிசம்பர் 2024, 5:17 pm

Din

வாலாஜாபேட்டையில் 13 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தாா்.

வாலாஜாபேட்டை நகராட்சிக்குட்பட்ட கடப்பரங்கையன் தெருவைச் சோ்ந்த சிவகுமாரின் மகன் அரி (13). இதில், அரி வாலாஜாப்பேட்டையில் உள்ள அரசு நிதியுதவி பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுவன் அரிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

தொடா்ந்து, மருத்துவ பரிசோதனையில் சிறுவனுக்கு டெங்கு பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது. தொடா்ந்து, அவரை வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த 7-ஆம் தேதி சோ்த்தனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அரி உயிரிழந்தாா். தகவல் அறிந்த நகராட்சி சுகாதார அலுவலா்கள் அந்தப் பகுதியில் சுகாதார பணிகளையும், அப்பகுதியில் உள்ளவா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றனா்.