மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

லாரி மோதி அரசு பள்ளி ஆசிரியை மரணம்

ராணிப்பேட்டையில் லாரி மோதியதில் அரசு பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா்

Updated On :24 பிப்ரவரி 2024, 4:44 pm

ராணிப்பேட்டையில் லாரி மோதியதில் அரசு பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த சீக்கிராஜபுரம் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த ஜெயராமதாஸ் மனைவி ஜமுனா (50). அரசு பள்ளி ஆசிரியை. தம்பதி சனிக்கிழமை சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் காரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றனா். அங்குள்ள சாலையோர பள்ளத்தில் நிலை தடுமாறி தம்பதி சாலையில் விழுந்தனா். அப்போது பின்னாடி வந்த கன்டெயினா் லாரி மோதியதில் ஜமுனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஜெயராமதாஸ் பலத்த காயங்களுடன் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தகவல் அறிந்த ராணிப்பேட்டை காவல் துறையினா் வந்து ஆசிரியை ஜமுனா உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.