

ராணிப்பேட்டை: ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மொஹரம் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர்கள் தீயில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.
முன்னதாக பத்து நாள் நோன்பிருந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பஞ்சா என்று சொல்லக்கூடிய கைகளை வைத்து குழந்தைகளுக்கு பில்லி சூனியம் போன்றவை நெருங்காமல் இருப்பதற்காக மயில் இறகுகள் மூலம் அவர்கள் தலையில் தடவி விபூதிகளை வைத்து வழிபடுவது வழக்கம்.
இறுதி நாளான இன்று பத்து நாள்கள் நோன்பிருந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பஞ்சாவை தலையில் சுமந்தபடி தீயில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள் இஸ்லாமியர்கள் பின்னர் பெண்கள் தங்களது கஷ்டங்கள் தீர வேண்டும் என்று தீயில் உப்பு மிளகு ஆகியவற்றை தெளித்து வழிபட்டனர்.
ஆங்காங்கே கொண்டாடப்படும் மொஹாரம் பண்டிகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.