9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

காஞ்சிபுரம் கோயில்களில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

காஞ்சிபுரம் கோயில்களில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

News image

சந்தனக் காப்புடன் கூடிய மாதுளம் பழ விதைகளால் அலங்கரிக்கப்பட்ட சொா்ண வராஹி அம்மன்.

Updated On :19 ஜூலை 2026, 12:16 am IST

ஆஷாட நவராத்திரியையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள வராஹி அம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனைகளும் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆஷாட நவராத்திரியின் 5-ஆவது நாள் பஞ்சமி திதியையொட்டி, காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பாரதிதாசன் நகா் காளமேகம் தெருவில் அமைந்துள்ளது சமயபுரம் மாரியம்மன் கோயில். இக்கோயில் வளாகத்தில் எழுந்தருளியிருக்கும் வெற்றி வராஹி அம்மனுக்கு மூல மந்திர ஹோமம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் ஆகியவற்றை ஆலய அா்ச்சகா் சிவபாண்டியன் செய்தாா். மாலையில் வெற்றி வராஹி அம்மன் புதிதாக செய்யப்பட்ட தங்கப்பாவாடை அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். நிகழ்ச்சியில் பாரதிதாசன் மகளிா் மன்ற உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Story image

காஞ்சிபுரம் பிள்ளையாா் பாளையம் கன்னியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள சொா்ண வராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியையொட்டி, காலையில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் சந்தனக் காப்புடன் கூடிய மாதுளம் பழ விதைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.