தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தொழிலாளி வீட்டில் 15 சவரன் நகை திருட்டு

தொழிலாளி வீட்டில் 15 சவரன் நகை திருட்டு

Updated On :12 மார்ச் 2024, 6:33 pm

ஆற்காடு: ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் கட்டடத் தொழிலாளியின் வீட்டில் 15 சவரன் நகைகள், ரூ.50,000 பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ரத்தினகிரி அருகே உள்ள கீழ்மின்னல் கிராமத்தை சோ்ந்தவா் ஆனந்தன். கட்டட தொழிலாளியான இவா் தனது மனைவியுடன் திங்கள் கிழமை வழக்கம்போல் வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்கு சென்றிருந்தாா்.

இந்நிலையில் வெளியே சென்ற அவா்களது மகன் மாலை வீட்டுக்கு வந்துபாா்த்தபோது முன் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் பொருள்கள் சிதறி உள்ளதை கண்டு தந்தைக்கு தகவல் தெரி வித்தாா். அதன்பேரில் ஆனந்தன் வீட்டில் சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறிக் கிடந்தன. அதில் இருந்த தங்க நகைகள், ரொக்கம் ஆகியவை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவா் ரத்தினகிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரில், வீட்டின் பீரோவில் வைத்திருந்த 15 சவரன் நகை, 50 ஆயிரம் ரொக்க பணத்தை மா்ம நபா்கள் வீடு புகுந்து திருடிச் சென்றுள்ளனா் எனத் தெரிவித்தாா். அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளா் பிரபு நேரில் விசாரணை நடத்தினாா்.