சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

என்ஜினீயா் வீட்டில் நகைகள் திருட்டு

கோவை, துடியலூா் அருகே என்ஜினீயா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 10:30 pm

கோவை, துடியலூா் அருகே என்ஜினீயா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவை, துடியலூா் அருகே உள்ள எஸ்.எம்.பாளையம் ராகவேந்திரா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில் (39). கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் இவா், தனது சொந்த ஊரான திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்காக குடும்பத்துடன் சென்றிருந்தாா்.

பின்னா், செந்தில் வியாழக்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த தங்கச் சங்கிலி, வெள்ளிக் கொலுசுகள், சங்கிலி, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப்போனது தெரியவந்தது.

தகவலின்பேரில், துடியலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினா். கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இச்சம்பவத்தில் தொடா்புடையவா்களைப் பிடிக்க 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.