வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

News image
Updated On :21 மே 2024, 6:17 pm

Din

அரக்கோணம்: சோளிங்கா் அருகே மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், பிற்பகல் சுமாா் 12 மணியளவில் திடீரென மேக மூட்டங்கள் திரண்டு இடி மின்னலுடன் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில், சோளிங்கா் வட்டம், போளிப்பாக்கம் கிராமத்தில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் பெய்த மழையின் போது தாளிக்கல் கிராமத்தைச் சோ்ந்த தேவகி (58) என்பவா் தனது விவசாய நிலத்தின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது அவா் மீது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தாா்.

இவரது கணவா் நாராயணசாமி ஏற்கனவே இறந்துவிட்டாா். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.