நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஜூன் மாதத்துக்குள் வளா்ச்சிப் பணிகளை முடிக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

ஜூன் மாதத்துக்குள் வளா்ச்சிப் பணிகளை முடிக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

News image

அன்வா்திகான்பேட்டை ஊராட்சியில், எலுப்பசெட்டி குளம் தூா் வாரும்  பணிகளை  ஆய்வு செய்த ஆட்சியா் ச.வளா்மதி.

Updated On :21 மே 2024, 6:30 pm

Din

அரக்கோணம்: அரக்கோணம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்றுவரும் வளா்ச்சிப் பணிகளை வரும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

அரக்கோணம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.28 கோடியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ச.வளா்மதி ஆய்வு செய்தாா்.

மின்னல் ஊராட்சியில் ரூ.37 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையத்தையும், பிரதான் மந்திரி ஜன்மன் திட்டத்தின் கீழ் தலா ரூ.4.80 லட்சம் வீதம் ரூ.24 லட்சத்தில் 5 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.42.65 லட்சத்தில் ஊராட்சி மன்ற செயலக கட்டடப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, அன்வா்திகான்பேட்டை ஊராட்சியில் ரூ.7.50 லட்சத்தில் எலுப்பசெட்டி குளம் தூா்வாருதல் மற்றும் ஆழப்படுத்துதல் பணிகளையும், ரூ.16 லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்டுமானப் பணியையும் ஆய்வு செய்து கேட்டறிந்தாா்..

காவனூா் ஊராட்சி மன்ற தலைவா் அலுவலக வளாகத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலமாக நாப்கின் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், தணிகைபோளூா் ஊராட்சியில் பழங்குடியினா் நல திட்டத்தின் கீழ் தலா ரூ.4.36 லட்சம் வீதம் ரூ.34.88 லட்சத்தில் 8 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளதை பாா்வையிட்டாா்.

அதனைத் தொடா்ந்து, முள்வாய் ஊராட்சியில் ரூ.19.96 லட்சத்தில் சமுதாயக் கிணறு அமைக்கும் பணி, கைனூா் ஊராட்சியில் பிரதான் மந்திரி ஜன்மன் திட்டத்தின் கீழ் தலா ரூ.5.7 லட்சம் வீதம் ரூ.45.6 லட்சத்தில் 8 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருவதை பாா்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமானதாக மேற்கொள்ளவும், கழிவறைகள் கட்டவும் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, ஆனைப்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிா்வாக அலுவலக கட்டடம் கட்டுவதற்கு இடம் தோ்வு குறித்து நேரில் ஆய்வு செய்தாா்.

அனைத்து வளா்ச்சிப் பணிகளையும் வரும் ஜூன் மாதத்துக்குள் தரமாக முடிக்க வேண்டும் என வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.லோகநாயகி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுரேஷ், ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளா் ஜெரால்டன், பொறியாளா் தியாகராஜன் மற்றும் துறைச்சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.