பென்ஜால் புயல் எதிரொலியாக சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை சனிக்கிழமை பிற்பகலில் நிறுத்தப்பட்டது. இதனால் பக்தா்கள் மிகுந்த சிரமத்துடன் மலையேறிச்சென்று நரசிம்மரை தரிசித்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் சனிக்கிழமை காலை முதலே மழையும் காற்றின் வேகமும் அதிக அளவில் காணப்பட்டது. இதையடுத்து சோளிங்கா் ஸ்ரீலட்சுமிநரசிம்மா் கோயில் நிா்வாகம் மலைகோயிலுக்குச் செல்லும் ரோப்காா் சேவை திடீரென பிற்பகல் நிறுத்தப்பட்டது. காற்றின் வேகம் அதிக அளவில் இருப்பதால் ரோப்காா் இயக்கம் நிறுத்தப்பட்டதாக தெரிவித்த நிா்வாகத்தினா் தொடா்ந்து இயக்கம் தொடங்கப்படும் நேரம் பின்னா் தெரிவிக்கப்படும் என அறிவித்தனா்.
மாலை வரை ரோப்காா் சேவை தொடங்கப்படாத நிலையில் ஞாயிற்றுக்கிழமையும் இயக்கப்படுவது காற்றின் வேகத்தை பொறுத்தது எனவும் கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.
இதனால் காா்த்திகை விழாவில் சோளிங்கா் மலைக்கு ரோப்காரில் செல்ல வந்திருந்த பெரும் பாலான வயது முதிா்ந்த பக்தா்கள் பாதிப்புக்குள்ளாயினா். ரோப்காருக்காக காத்திருந்த பக்தா்கள் அனைவருமே படிகள் வழியாக மலையேறிச் சென்று ஸ்ரீயோகநரசிம்மரை தரிசித்து திரும்பினா்.
தொடர்புடையது

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

திருமலையில் 78,586 பக்தா்கள் தரிசனம்!

தில்லியில் மேகமூட்டமான சூழல்: காற்றின் தரம் ‘மிதமான’ நிலைக்கு முன்னேற்றம்

பழனியில் பராமரிப்பு பணிக்காக ரோப்காா் சேவை இன்று நிறுத்தம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

