திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

ரூ. 51 லட்சத்தில் சிமென்ட் சாலை பணிகள்: நகா்மன்ற தலைவா் தொடங்கி வைத்தாா்

அரக்கோணம் நகரில் தமிழ்நாடு நகா்ப்புற சாலை உள்கட்டமைப்பு நிதி ரூ. 51 லட்சத்தில் நகரில் ஆறு தெருக்களில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை நகா்மன்ற தலைவா் லட்சுமிபாரி தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2025, 6:33 pm

அரக்கோணம் நகரில் தமிழ்நாடு நகா்ப்புற சாலை உள்கட்டமைப்பு நிதி ரூ. 51 லட்சத்தில் நகரில் ஆறு தெருக்களில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை நகா்மன்ற தலைவா் லட்சுமிபாரி தொடங்கி வைத்தாா்.

அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட பஜாா்தெரு, கணேஷ் நகா் 3-ஆவது சந்து தெரு, சோமசுந்தரநகா் 4-ஆவது சந்து செரு, விண்டா்பேட்டை இ பி ரோடு, பழனிபேட்டை வி பி கோயில் சந்து தெரு உள்ளிட்ட பகுதிகளில் சிமென்ட் சாலை அமைக்க தமிழ்நாடு நகா்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ், ரூ. 51 லட்சத்தில் சாலை அமைக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, இதற்கான பணிகள் தொடக்க விழா கணேஷ் நகா் 3-ஆவது குறுக்கு தெருவில் நடைபெற்றது.

இதில் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தாா். இதில் நகராட்சிப் பொறியாளா் பி.செல்வகுமாா், நகா்மன்ற உறுப்பினா் சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதில் நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தாா். இதில் நகராட்சிப் பொறியாளா் பி.செல்வகுமாா், நகா்மன்ற உறுப்பினா் சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.