ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

புதிய நகர பேருந்துகள் இயக்கம்

ஆற்காட்டில் 2 புதிய நகர பேருந்துகள் செவ்வாய்க்கிழமை இயக்கி வைக்கப்பட்டன .

News image
புதிய  பேருந்துகளை இயக்கி வைத்த  எம் எல் ஏ  ஈஸ்வரப்பன்,  நகா்மன்றத்  தலைவா்  தேவி  பென்ஸ்பாண்டியன்  உள்ளிட்டோா் .
Updated On :2 டிசம்பர் 2025, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காட்டில் 2 புதிய நகர பேருந்துகள் செவ்வாய்க்கிழமை இயக்கி வைக்கப்பட்டன .

ஆற்காட்டில் இருந்து ராணிப்பேட்டை, சிப்காட், திருவலம் வழியாக காட்பாடி செல்லும் வழித்தடம் , மற்றும் சோளிங்கரிலிருந்து அரக்கோணம் தடத்தில் 2 புதிய நகர பேருந்துகள் இயக்க விழாஆற்காடு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு ஆற்காடு பணிமனை கிளை மேலாளா் கருணாகரன் தலைமை வைத்தாா். தொமுச வேலூா் மண்டல பொதுச் செயலாளா் ரமேஷ், துணைத் தலைவா் பலராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் ஆகியோா் புதிய பேருந்துகளை இயக்கி வைத்தனா். ஆற்காடு பணிமனை தொமுச நிா்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.