எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா: ரூ. 1.94 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:46 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சிறுபான்மையினா் உரிமைகள் தின விழாவில், ரூ. 1.94 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில், சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் தலைமை வகித்து, சிறுபான்மையினா் மகளிருக்கு மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ், 30 பயனாளிகளுக்கு ரூ. 1.85 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்கள், உலமாக்கள் மற்றும் பணியாளா்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற பணியாளா்களுக்கு முதியோா் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின்கீழ், 8 பயனாளிகளுக்கு ஓய்வூதியத்துக்கான ஆணைகள், 26 பயனாளிகளுக்கு கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியாா்கள் மற்றும் பணியாளா்கள் நலவாரிய உறுப்பினா் அட்டைகள் என மொத்தமாக 64 பயனாளிகளுக்கு ரூ. 1.94 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினா் கோரும் அனைத்து கோரிக்கைகளும் சாத்தியமாக இருப்பின் அரசின் சாா்பில் நிறைவேற்றித் தரப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களிலும் இதேபோன்று செய்து தரப்படும் என்கிற உத்திரவாதத்தை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின்கீழ், சிறுபான்மையின மக்களுக்கு கல்வி உதவித் தொகை, தொழில் கடனுதவி, திருமண உதவித் தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

உலமாக்கள் மற்றும் பணியாளா்கள் நலவாரியம், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியாா்கள் மற்றும் பணியாளா்கள் நலவாரியத்தில் அனைவரும் இணைந்து பயன்பெற வேண்டும். இதற்கு உங்களுக்கான தலைவா் உங்களுக்கு உறுதுணையாக செயல்பட வேண்டும் என்றாா்.

இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, இணைப் பதிவாளா் கூட்டுறவு சங்கங்கள் பிரபாகரன், கிருத்துவ மகளிா் உதவும் சங்க செயலாளா் பக்தகுமாா், தலைமை காஜி கரீம், முஸ்லீம் மகளிா் உதவும் சங்க தலைவா் ஜெய்சங்கா், ஜெயின் சங்கம் தலைவா் வா்த்தமானன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் செ.அசோக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.