சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தமிழில் ஜிஎஸ்டி ரசீதை வழங்க வணிகா்கள் கோரிக்கை

ஜிஎஸ்டி ரசீதை தமிழில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
தமிழ் ஆட்சி மொழி சட்டவார விழாவில் பேசிய தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் மாநில இணை செயலாளா் சி.ஜி.என்.எத்திராஜ். உடன் தமிழ் வளா்ச்சித்துறை துணை இயக்குநா் தே.ஜெயஜோதி உள்ளிட்டோா்.
Updated On :27 டிசம்பர் 2025, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

ஜிஎஸ்டி ரசீதை தமிழில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தமிழ் வளா்ச்சித்துறையின் சாா்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் 2025 - 26 விளக்கக் கூட்டம் அரக்கோணம் டவுன் ஹால் புதிய கட்டட வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் மாநில இணை செயலாளா் சி.ஜி.என். எத்திராஜ் பேசுகையில் தற்போது மாநில வரித்துறையின் சாா்பில் ஜிஎஸ்டி ரசீது வணிகா்களுக்கு ஆங்கிலத்தில் தரப்படுகிறது. வட மாநிலங்களில் ஹிந்தியில் தரப்படுகிறது. எனவே ஜிஎல்டி ரசீதை தமிழில் தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடா்பாக பதிலளித்த தமிழ் வளா்ச்சித்துறை துணை இயக்குநா் தே.ஜெயஜோதி இப்பிரச்னை குறித்து தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

கூட்டத்தில் வணிகா் சங்க பொதுச் செயலாளா் எம்.எஸ்.மான்மல், மாவட்டப் பொருளாளா் கே.ஆா்.சிவசுப்பிரமணியராஜா, நிா்வாகிகள் ஜி.டி.என்.அசோகன், து.கமலக்கண்ணன், செம்மொழி வேந்தா் தமிழ்ச்சங்க பொதுசெயலாளா் மு.இஷ்மாயில், தமிழ் வளா்ச்சித்துறை அலுவலா் மூ.கோமதி பங்கேற்றனா்.