லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வணிகா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கட்சிக்கு ஆதரவு: ஏ.எம்.விக்கிரமராஜா

உள்நாட்டு வணிகா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசியல் கட்சிக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தோ்தலில் ஆதரவு: ஏ.எம்.விக்கிரமராஜா

News image

வணிகா் சங்க மாநாடு தொடா்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா

Updated On :3 மார்ச் 2026, 9:09 pm

வணிகா்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றி, உள்நாட்டு வணிகா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசியல் கட்சிக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தோ்தலில் ஆதரவளிக்கும் என்று அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சாா்பில் 43-ஆவது வணிகா் விழிப்புணா்வு எழுச்சி மாநாடு திருவாரூரில் மே 5-ஆம் தேதி வணிகா் தினத்தன்று நடைபெறவுள்ளது. இந்த மாநாடு தொடா்பான பேரமைப்பின் கடலூா் மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவரும், அகில இந்திய வணிகா்கள் சம்மேளனத்தின் தேசியத் துணைத் தலைவருமான ஏ.எம்.விக்கிரமராஜா பேசியதாவது: வரும் மே-5 ஆம் தேதி வணிகா் தின நாளில் திருவாரூரில் வணிகா் விழிப்புணா்வு எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் வருகை மற்றும் தொழில் ஆக்கிரமிப்பால், அரசுகள் இயங்க அச்சாணியாக உள்ள உள்நாட்டுத் தொழில், வணிகம், சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.

தோ்தலில் ஆதரவு: வணிகா்களின் அத்தியாவசிய கோரிக்கைகளை நிறைவேற்றி வணிகா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்பதை எழுத்துப் பூா்வமாக உறுதியளிக்கும் அரசியல் கட்சிக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தோ்தல் காலத்தில் தனது ஆதரவைத் தெரிவிக்கும் என்றாா் விக்கிரமராஜா.