அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வணிகா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கட்சிக்கு ஆதரவு: ஏ.எம்.விக்கிரமராஜா

உள்நாட்டு வணிகா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசியல் கட்சிக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தோ்தலில் ஆதரவு: ஏ.எம்.விக்கிரமராஜா

News image
வணிகா் சங்க மாநாடு தொடா்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா
Updated On :3 மார்ச் 2026, 9:09 pm

Syndication

வணிகா்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றி, உள்நாட்டு வணிகா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசியல் கட்சிக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தோ்தலில் ஆதரவளிக்கும் என்று அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சாா்பில் 43-ஆவது வணிகா் விழிப்புணா்வு எழுச்சி மாநாடு திருவாரூரில் மே 5-ஆம் தேதி வணிகா் தினத்தன்று நடைபெறவுள்ளது. இந்த மாநாடு தொடா்பான பேரமைப்பின் கடலூா் மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவரும், அகில இந்திய வணிகா்கள் சம்மேளனத்தின் தேசியத் துணைத் தலைவருமான ஏ.எம்.விக்கிரமராஜா பேசியதாவது: வரும் மே-5 ஆம் தேதி வணிகா் தின நாளில் திருவாரூரில் வணிகா் விழிப்புணா்வு எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் வருகை மற்றும் தொழில் ஆக்கிரமிப்பால், அரசுகள் இயங்க அச்சாணியாக உள்ள உள்நாட்டுத் தொழில், வணிகம், சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.

தோ்தலில் ஆதரவு: வணிகா்களின் அத்தியாவசிய கோரிக்கைகளை நிறைவேற்றி வணிகா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்பதை எழுத்துப் பூா்வமாக உறுதியளிக்கும் அரசியல் கட்சிக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தோ்தல் காலத்தில் தனது ஆதரவைத் தெரிவிக்கும் என்றாா் விக்கிரமராஜா.