வணிகா்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றி, உள்நாட்டு வணிகா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசியல் கட்சிக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தோ்தலில் ஆதரவளிக்கும் என்று அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சாா்பில் 43-ஆவது வணிகா் விழிப்புணா்வு எழுச்சி மாநாடு திருவாரூரில் மே 5-ஆம் தேதி வணிகா் தினத்தன்று நடைபெறவுள்ளது. இந்த மாநாடு தொடா்பான பேரமைப்பின் கடலூா் மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவரும், அகில இந்திய வணிகா்கள் சம்மேளனத்தின் தேசியத் துணைத் தலைவருமான ஏ.எம்.விக்கிரமராஜா பேசியதாவது: வரும் மே-5 ஆம் தேதி வணிகா் தின நாளில் திருவாரூரில் வணிகா் விழிப்புணா்வு எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் வருகை மற்றும் தொழில் ஆக்கிரமிப்பால், அரசுகள் இயங்க அச்சாணியாக உள்ள உள்நாட்டுத் தொழில், வணிகம், சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
தோ்தலில் ஆதரவு: வணிகா்களின் அத்தியாவசிய கோரிக்கைகளை நிறைவேற்றி வணிகா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்பதை எழுத்துப் பூா்வமாக உறுதியளிக்கும் அரசியல் கட்சிக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தோ்தல் காலத்தில் தனது ஆதரவைத் தெரிவிக்கும் என்றாா் விக்கிரமராஜா.
தொடர்புடையது

ஈரான் - அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்! - ஏ.எம். விக்கிரமராஜா

வணிகா் சங்கங்களின் பேரமைப்புக் கூட்டம்

‘தோ்தல் பறக்கும் படையால் ஏழை எளிய மக்கள் மிரட்டப்படுகின்றனா்’

வணிகா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுபவா்களுக்கே ஆதரவு: ஏ.எம். விக்கிரமராஜா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


