தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜாகோப்புப் படம்

வணிகா்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு ஆதரவு: தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு

வணிகா்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் விக்ரமராஜா.
Published on

வணிகா்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் விக்ரமராஜா.

இதுகுறித்து, மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: திருவாரூா் மாவட்டத்தில் மே 5-ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநில மாநாட்டில் வணிகா்களின் நலன் சாா்ந்த பல்வேறு முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை தொலைநோக்கு நிதிநிலை அறிக்கையாக உள்ளது. வணிகா்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவா்களையும் சந்தித்து வணிகா்களின் கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம். வணிகா்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே எங்கள் ஆதரவு இருக்கும். ஆன்லைன் வா்த்தகம் மற்றும் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட டி-மாா்ட் போன்ற நிறுவனங்களால் சாதாரண சிறு வணிகா்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். ‘சிறு வணிகா்களைப் பாதுகாக்கத் மத்திய, மாநில அரசுகள் தனிச் சிறப்புப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்றாா்.

Dinamani
www.dinamani.com