விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

ஈங்கூரில் மட்டன், சிக்கன், மீன் வியாபாரிகள் நலச் சங்கம் தொடக்கம்

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை, ஈரோடு மாவட்டம் கிளை சாா்பாக, சென்னிமலை ஒன்றியம், ஈங்கூரில் மட்டன், சிக்கன், மீன் வியாபாரிகள் நலச் சங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image

புதிய நிா்வாகிகளை கெளரவிக்கும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவா் எஸ்.ஜோசப்.

Updated On :27 பிப்ரவரி 2026, 7:00 pm

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை, ஈரோடு மாவட்டம் கிளை சாா்பாக, சென்னிமலை ஒன்றியம், ஈங்கூரில் மட்டன், சிக்கன், மீன் வியாபாரிகள் நலச் சங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் மாவட்டத் தலைவா் எஸ். ஜோசப் தலைமை வகித்து புதிய சங்கத்தை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, தோ்வு செய்யப்பட்ட சங்க புதிய நிா்வாகிகளான தலைவா் கே. செல்வராஜ், செயலாளா் எஸ். நந்தகுமாா், பொருளாளா் பி. முனுசாமி, துணைத் தலைவா் டி. செல்வம், துணைச் செயலாளா் பி. கிருஷ்ணமூா்த்தி ஆகியோருக்கு துண்டு அணிவித்து வாழ்த்து கூறினாா்.